தெலங்கானா மசோதாவை எரித்து போகி கொண்டாட்டம்

By செய்திப்பிரிவு

ஆந்திரத்தைப் பிரிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சீமாந்திரா பகுதி மக்கள் தெலங்கானா மசோதா நகலை எரித்து போகிப் பண்டிகையைக் கொண்டாடினர்.

போகிப் பண்டிகை திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. அதிகாலையில் பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்த பழைய துணிமணிகள் மற்றும் பொருட்களை தங்களது வீட்டுக்கு முன்பு வைத்து தீயிட்டுக் கொளுத்தினர்.

ஆனால் ஆந்திர மாநிலத்தில் உள்ள கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளைச் சேர்ந்த அரசு ஊழியர் சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் தெலங்கான மசோதா நகல்களை எரித்து தங்களது கண்டனத்தையும் எதிர்ப்பையும் மத்திய, மாநில அரசுகளுக்கு தெரிவித்தனர்.

குறிப்பாக பிரகாசம், ஒங்கோல், குண்டூர், விஜயவாடா ஆகிய பகுதிகளில் அரசு ஊழியர் சங்கத்தினர், தெலுங்கு தேசம் கட்சியினர், ஒருங்கிணைந்த ஆந்திர மாநில பாதுகாப்பு குழுவினர் உள்ளிட்டோர் தெலங்கான மசோதா நகல்களை கிழித்து, எரித்து போகிப் பண்டிகையைக் கொண்டாடினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

விளையாட்டு

47 mins ago

க்ரைம்

51 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்