மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கக் கோரும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
இதனால், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 80 சதவிகிதத்தில் இருந்து 90 சதவிகிதமாக உயர்கிறது. கடந்த ஜூலை 1-ம் தேதியைக் கணக்கிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வரும்.
இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். அகவிலைப்படி உயர்வினால் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.10,879 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த 2010 செப்டம்பரில், பத்து சதவீத அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்தது. அதன்பின்னர், ஒற்றை இலக்க எண்ணிலேயே அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இரட்டை இலக்கத்தில் அகவிலைப்படி அறிவிக்கப்படுவது மத்திய அரசு ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
3 hours ago
க்ரைம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
3 hours ago
வணிகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
12 hours ago