இருமுனை போருக்கு தயார்: ராணுவ தளபதி கருத்து

By செய்திப்பிரிவு

பாகிஸ்தான், சீனாவுடன் ஒரே நேரத்தில் போர் ஏற்பட்டால் இருமுனை போருக்கு இந்திய ராணுவம் தயாராக உள்ளது என்று தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

ஐந்தாயிரம் கி.மீ. தொலைவு பாயும் திறன் கொண்ட அக்னி 5 ஏவுகணை அண்மையில் வெற்றி கரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை மூலம் சீனாவின் எந்தப் பகுதியையும் தாக்க முடியும் என்று பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

பாகிஸ்தான், சீனாவுடன் ஒரே நேரத்தில் போர் ஏற்பட்டால் இரு முனை போருக்கு இந்திய ராணுவம் தயாராக உள்ளது. எனினும் இந்தியாவைப் பொறுத்த வரை அமைதியையே விரும்பு கிறோம். எல்லைப் பிரச்சினை தொடர்பாக சீனாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அண்மையில் ஓய்வு பெற்ற விமானப் படைத் தளபதி ஏர் மார்ஷல் அரூப் ரஹா கூறிய போது, இருமுனை போருக்கு தேவையான போர் விமானங்கள் இந்தியாவிடம் இல்லை. இன்ன மும் அதிக போர் விமானங்கள் தேவை என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

சினிமா

42 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

49 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

29 mins ago

மேலும்