ரயில்வே துறையை தனியார்மயமாக்க முயற்சி: இந்திய கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

ரயில்வே துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக அந்த கட்சி தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய ரயில்வே துறையில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க வேண்டும். அந்தத் துறையை தனியார்மயமாக்க வேண்டும் என்று நிதி ஆயோக் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இதைத் தொடர்ந்து பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது ரயில்வேயை தனியார்மயமாக்கும் நடவடிக்கை ஆகும். இதனை இந்திய கம்யூனிஸ்ட் கடுமையாக கண்டிக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

43 mins ago

விளையாட்டு

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்