நீதிமன்றங்களில் பாலியல் புகாரை விசாரிக்க குழு அமைப்பு

By செய்திப்பிரிவு

நீதிமன்றங்களில் பாலியல் தொல்லை தொடர்பான புகாரை விசாரிக்க நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 10 உறுப்பினர்கள் குழுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அமைத்தது.

உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள இந்த பாலின புகார் தொடர்பான அக விசாரணைக் குழுவில் 6 பெண் உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். விசாகா வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் பாலியல் தொந்தரவு தொடர்பான புகாரை விசாரிக்கும் வகையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்தக் குழு செயல்படும்.

இந்த குழுவில் நீதிபதி மதன் பி. லோகுர், மூத்த வழக்கறிஞர் எல். நாகேஸ்வர ராவ், பேராசிரியர் ஜி. மோகன் கோபால், மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா, வழக்கறிஞர் பினா மாதவன், பி.சுனிதா ராவ், மது சவுகான், பாரதி அலி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவின் உறுப்பினர் செயலாளராக ரச்னா குப்தா செயல்படுவார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

இந்தியா

28 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

50 mins ago

சினிமா

57 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

கல்வி

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்