உத்தரப் பிரதேச மாநிலம் பண்டா நகரில் சமாஜ்வாதி கட்சி சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அக்கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் பேசியதாவது:
சமாஜ்வாதி - காங்கிரஸ் இடையே கூட்டணி ஏற்பட்ட திலிருந்து எதிர்க்கட்சியினர் கலக் கம் அடைந்துள்ளனர். இதனால் பிரச்சாரத்தின்போது எங்கள் கூட்டணியைப் பற்றி மட்டுமே விமர்சனம் செய்கின்றனர். வேறு எதைப் பற்றியும் பேசுவதில்லை.
கடந்த 5 ஆண்டுகளில் எனது தலைமையிலான அரசு எந்த வளர்ச்சிப் பணியையும் செய்யவில்லை என பிரதமர் மோடி குற்றம்சாட்டுகிறார். ஆனால், நாட்டிலேயே இந்த மாநிலத்தில்தான் சிறப்பான சாலைகள் போடப்பட்டுள்ளன. இதை நீங்கள் கண்கூடாக பார்க்க முடியும். எனவே, எங்களது அரசின் வளர்ச்சிப் பணிகளை, முந்தைய அரசுகளின் பணிகளோடு ஒப்பிட்டுப் பார்த்து பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
57 mins ago
ஜோதிடம்
1 hour ago
இந்தியா
48 mins ago
இந்தியா
47 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
க்ரைம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
6 hours ago