காங். கூட்டணியால் எதிர்க்கட்சி கலக்கம்: அகிலேஷ் தாக்கு

By பிடிஐ

உத்தரப் பிரதேச மாநிலம் பண்டா நகரில் சமாஜ்வாதி கட்சி சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அக்கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் பேசியதாவது:

சமாஜ்வாதி - காங்கிரஸ் இடையே கூட்டணி ஏற்பட்ட திலிருந்து எதிர்க்கட்சியினர் கலக் கம் அடைந்துள்ளனர். இதனால் பிரச்சாரத்தின்போது எங்கள் கூட்டணியைப் பற்றி மட்டுமே விமர்சனம் செய்கின்றனர். வேறு எதைப் பற்றியும் பேசுவதில்லை.

கடந்த 5 ஆண்டுகளில் எனது தலைமையிலான அரசு எந்த வளர்ச்சிப் பணியையும் செய்யவில்லை என பிரதமர் மோடி குற்றம்சாட்டுகிறார். ஆனால், நாட்டிலேயே இந்த மாநிலத்தில்தான் சிறப்பான சாலைகள் போடப்பட்டுள்ளன. இதை நீங்கள் கண்கூடாக பார்க்க முடியும். எனவே, எங்களது அரசின் வளர்ச்சிப் பணிகளை, முந்தைய அரசுகளின் பணிகளோடு ஒப்பிட்டுப் பார்த்து பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

57 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

48 mins ago

இந்தியா

47 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

மேலும்