ஆந்திராவை நோக்கி நகரும் ஹுத்ஹுத் புயல் நாளை கரையை கடக்க இருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விரைவு ரயில்கள் உட்பட 38 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.
வங்கக் கடலில் அந்தமான் தீவு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி புயல் சின்னமாக மையம் கொண்டுள்ளது.
கடலோர ஆந்திராவை நோக்கி வந்து கொண்டிருக்கும் ஹுத்ஹுத் புயல் 12-ஆம் தேதி முற்பகலில் ஆந்திராவை நோக்கி நகரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
விசாகப்பட்டினம்- ஒடிஸா மாநிலம் கோபாலபூர் இடையே கரையைக் கடக்கும் ஹுத்ஹுத் புயல் மிக கடுமையான புயல் சேதத்தை ஏற்படுத்தும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிழக்கு கடற்கரை மார்கத்தில் அக்டோபர் 12-ஆம் தேதியில் புவனேஷ்வர்-விசாகப்படினம் இடையே காலை 6 மணி முதல் இயங்கும் 38 விரைவு மற்றும் பயணிகள் ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக கிழக்கு ரயில்வே இயக்குனர் ஜே.பி. மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
தெற்கு ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது:
கிழக்கு கடற்கரை மார்கத்தில் உள்ள புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, நீண்ட தூரம் செல்லும் பயணிகள் மற்றும் விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதன் விவரம்:
விஜயவாடா, பல்லார்ஷா, நாக்பூர் ரயில்கள்
13352 ஆலப்புழா-தன்பத் விரைவு ரயில்
22641 திருவனந்தபுரம்-ஷலிமர் விரைவு ரயில்
12666 கன்னியாகுமரி-ஷலிமர் விரைவு ரயில்
இதைத் தவிர, அக்டோபர் 12 மற்றும் 13 ஆகிய இரு தேதிகளிலும், 13351 தன்பத்- ஆலப்புழா வரும் விரைவு ரயில், ஆலப்புழா ரயில் நிலையத்துக்கு இரவு 8.20க்கு வந்து சேரும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
16 mins ago
தமிழகம்
16 mins ago
சினிமா
20 mins ago
கல்வி
25 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சுற்றுலா
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago