தெலங்கானா முதல்வர் சந்திரசேகருக்கு கோயில் கட்டிய போலீஸ்காரர்

By என்.மகேஷ் குமார்

தெலங்கானா மாநில முதல்வர் கே. சந்திரசேகர ராவுக்கு அம் மாநிலத்தைச் சேர்ந்த போலீஸ் காரர் ஒருவர் கோயில் கட்டி யுள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தெலங்கானா மாநிலம் நல் கொண்டா மாவட்டத்தில் உள்ள நிதமனூரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீநிவாசுலு. இவர், சவுட்டப்பல் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர், டிஆர்எஸ் கட்சி தலைவரும், தெலங்கானா முதல்வருமான கே. சந்திரசேகர ராவின் தீவிர ஆதரவாளர் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், முதல்வர் சந்திரசேகர ராவ் மீதுள்ள பற்றின் காரணமாக, அவருக்கு கோயில் எழுப்ப ஸ்ரீநிவாசுலு முடிவு செய்தார். இதற்கு அவரது குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, தமது சொந்த ஊரான நிதமனூரு கிராமத்தில் தனது விவசாய நிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவுக்கு ரூ.2 லட்சம் செலவில் ஸ்ரீநிவாசுலு கோயில் கட்டியுள்ளார். அங்கு அவரது சிலையும் வைக்கப்பட்டிருக்கிறது.

தனது கிராமத்துக்கு முதல்வர் சந்திரசேகர ராவ் பிரச்சாரத்துக்காக வருகை தரும்போது, இக்கோயிலின் திறப்பு விழாவை நடத்த வேண்டும் என ஸ்ரீநிவாசுலு காத்துக் கொண்டிருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

6 mins ago

சினிமா

17 mins ago

சினிமா

20 mins ago

வலைஞர் பக்கம்

24 mins ago

சினிமா

29 mins ago

சினிமா

34 mins ago

இந்தியா

42 mins ago

க்ரைம்

39 mins ago

இந்தியா

45 mins ago

தமிழகம்

1 hour ago

மேலும்