தோஹாவில் இருந்து ஹைதராபாத் வந்த விமானத்தில் 11 மாத குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது.
கத்தார் நாட்டின் தோஹாவில் இருந்து ஹைதராபாத்துக்கு இன்று பயணிகள் விமானம் புறப்பட்டு வந்தது. கத்தார் நாட்டைச் சேர்ந்த அந்த விமானத்தில் அர்னவ் வர்மா என்பவர் குடும்பத்துடன் பயணம் செய்தார். விமானம் தரையிறங்க சற்று நேரம் இருந்த நிலையில் அர்னவ் வர்மாவின் 11 மாத ஆண் குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.
உடனடியாக பெற்றோரும், விமான பணியாளர்களும் முதலுதவி செய்ய முற்பட்டனர். உடனடியாக ஹைதராபாத் விமான நிலையத்துக்கு தகவல் தரப்பட்டது. விமானம் தரையிறங்கும் முன்பாக அங்கிருந்த உட்பகுதி மருத்துவமனை உஷார்படுத்தப்பட்டது. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. விமானம் உடனடியாக தரையிறங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி விமானம் தரையிறக்கப்பட்டு குழந்தை வேகமாக விமான நிலைய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர். குழந்தையை காப்பாற்ற ஏற்பாடுகள் செய்து காப்பாற்ற முடியாததால் விமான நிலை ஊழியர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
12 mins ago
க்ரைம்
16 mins ago
இந்தியா
14 mins ago
சினிமா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
சுற்றுலா
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
ஓடிடி களம்
1 hour ago
தமிழகம்
3 hours ago