மத்திய பாஜக அரசை எதிர்த்து சத்தியாகிரகம்: மார்ச் 23ல் தொடங்குகிறார் அன்னா ஹசாரே

By ஐஏஎன்எஸ்

விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகள், லோக்பால் மசோதா ஆகியவற்றை நிறைவேற்றாமல் பிரதமர் மோடி தோல்வியடைந்ததாக சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே குற்றஞ்சாட்டியுள்ளார். மார்ச் 23ல் சத்தியாகிரகப் போராட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பாட்னாவில் அன்று அவர் கூறியதாவது:

விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், ஜன் லோக்பால் மற்றும் தேர்தல் சீர்த்திருத்தங்கள் ஆகியவற்றை முன்னிறுத்தி புதுடெல்லியில் வரும் மார்ச் 23 அன்று சத்யாகிரகப் போராட்டத்தை தொடங்க உள்னேன்.

நான் விவசாயிகளுக்காகவும் லோக்பால் மசோதாவுக்காகவும் போராடுவேன். இப்பிரச்சனைகள் குறித்து நான் கடந்த மூன்று ஆண்டுகளாக மவுனம் காத்து வருகிறார். இப்பிரச்சினைகள் குறித்துப் பேச பாஜக தலைமையிலான மத்திய அரசை தொடர்புகொள்ள பலமுறை முயன்றேன். அவர்கள் செவி சாய்க்கவில்லை.

இப்பிரச்சினைகள் தொடர்பாக எழுத்துபூர்வமாக 21 கடிதங்களை பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளேன். ஆனால் இதுநாள் வரை ஒரு பதிலும் வரவில்லை.

இவ்வாறு அன்னா ஹசாரே தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

6 hours ago

வலைஞர் பக்கம்

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்