இன்று இரவு தூங்குபவர்களை கொன்று விடுவேன்: 6 தலையுடன் பிறந்த குழந்தை பேசியதாக தெலங்கானாவில் வதந்தி

By செய்திப்பிரிவு

தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் புதன்கிழமை 6 தலைகளுடன் அதிசய குழந்தை ஒன்று பிறந்ததாகவும் அந்த குழந்தை பிறந்தவுடன் “இன்று இரவு தூங்குபவர்களை கொன்று விடுவேன்” என கூறியதாகவும் வதந்தி பரவியது.

இதேபோன்று ஒரு பசு மாட்டுக்கு மனித உருவம் கொண்ட குழந்தை பிறந்ததாகவும், அந்த குழந்தையும் இதேபோல கூறியதாகவும் மற்றொரு வதந்தி பரவியது.

இதையடுத்து, நலகொண்டா, கம்மம், மேதக், வாரங்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பலர் தங்களது உறவினர், நண்பர்களுக்கு செல்போன் மூலம் இந்தத் தகவலை தெரிவித்து இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருக்கும்படி கூறியுள்ளனர்.

இதனால் பெரும்பாலான மக்கள் இரவு முழுவதும் தூங்காமல் விடிய, விடிய விழித்திருந்தனர். இதற்கிடையே இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என நலகொண்டா மாவட்ட பகுத்தறிவு சங்க பிரதிநிதிகள் வியாழக்கிழமை மக்களை கேட்டுக்கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 mins ago

விளையாட்டு

17 mins ago

இந்தியா

11 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

8 mins ago

விளையாட்டு

24 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

35 mins ago

இந்தியா

48 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்