ராஜீவ் காந்தி கொலையில் சதி: பேரறிவாளன் மனு மீது அக்டோபர் மாதம் விசாரணை; உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு

By பிடிஐ

கடந்த 1991-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரம் செய்த போது மனித வெடிகுண்டு தாக்குதலில் இறந்தார். இதுகுறித்த வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன் உட்பட 4 பேருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், ராஜீவ் கொலையின் பின்னணியில் இருக்கும் மிகப்பெரிய சதி குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. அதன்பிறகு சிபிஐ தலைமையில் ஐ.பி., ரா போன்ற புலனாய்வு அமைப்புகள், வருவாய் புலனாய்வுத் துறை அடங்கிய பன்முக ஒழுங்கு கண்காணிப்புக் குழு (எம்டிஎம்ஏ) கடந்த 1998-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இக்குழு ராஜீவ் கொலையில் உள்ள சதி குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணையின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்ஹா மற்றும் கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறும்போது, ‘‘இந்த மனு மீது வரும் அக்டோபர் மாதம் விசாரணை நடத்துகிறோம்’’ என்று உத்தரவிட்டனர். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

மேலும்