நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு தேவைப்பட்டால் பாஜக.வுக்கு ஆதரவளிக்க தெலங்கானா ராஷ் டிரிய சமிதி கட்சி முன்வந்துள்ளது.
வரும் 2019-ம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்தல் நடை பெறுகிறது. தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தெலங் கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) தலைவரும் தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ், டெல்லியில் கடந்த சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பு ஒரு மணி நேரத்துக்கு மேல் நடைபெற்றது.
இதுகுறித்து டெல்லி வட்டாரங் கள் கூறும்போது, ‘‘மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து மோடி யும் சந்திரசேகர ராவும் விரிவாக ஆலோசனை நடத்தி உள்ளனர். அப்போது, தேர்தலுக்கு முன்பு தெலங்கானாவில் டிஆர்எஸ் - பாஜக கூட்டணி அமைப்பதால், டிஆர்எஸ் கட்சிக்கு எந்தப் பலனும் ஏற்படாது என்று சந்திரசேகர ராவ் கூறியிருக்கிறார். ஆனால், தேர்தலுக்குப் பிறகு பாஜக.வுக்கு போதிய பலம் கிடைக்காவிட்டால், அந்த நேரத்தில் ஆதரவளிக்க டிஆர்எஸ் ஒப்புக்கொண்டுள்ளது’’ என்று தெரிவித்தன.
ஆந்திராவுக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்று கூறி பாஜக.வுக்கு அளித்து வந்த ஆதரவை, ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு விலக்கிக் கொண்டார். அதன்பிறகு பாஜக.வுடன் டிஆர்எஸ் நெருக்கம் காட்டி வருகிறது.
மத்தியில் பாஜக தலைமையி லான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிஆர்எஸ் கட்சி இடம் பெறவில்லை. எனினும், சமீபத்தில் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி கள் கொண்டு வந்த நம்பிக்கை யில்லா தீர்மானத்தில் டிஆர்எஸ் எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை.
கடந்த ஜூன் மாதமே பிரதமர் மோடியை, சந்திரசேகர ராவ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி னார். அதன்பிறகு மீண்டும் இருவரும் சந்தித்துப் பேசியுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 mins ago
க்ரைம்
8 mins ago
சுற்றுச்சூழல்
44 mins ago
க்ரைம்
48 mins ago
இந்தியா
46 mins ago
சினிமா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
சுற்றுலா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago