மோடி, ஆதித்யநாத் மட்டுமே நேர்மையான தலைவர்கள்: உத்தர பிரதேச பாஜக எம்.பி. கருத்து

By செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் யோகி ஆதித்ய நாத் மட்டுமே நேர்மையான தலைவர்கள். இதர பாஜக தலைவர்கள் அப்படி இல்லை என்று உத்தர பிரதேச பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசம் கோண்டா தொகுதி எம்.பி.யான அவர், கோண்டாவில் நடைபெற்ற கூட்டத்தில் இது தொடர்பாக பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி ஊழலே செய்யாதவர். இதேபோல உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீதும் எவ்வித ஊழல் குற்றச்சாட்டையும் சுமத்த முடியாது. ஆனால் இதர பாஜக தலைவர்கள் அப்படி இல்லை. அவர்களுக்கு அத்தகைய உத்தரவாதத்தை அளிக்க முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாஜகவின் மூத்த தலைவர்கள் பலர் ஊழல்வாதிகளாக உள்ளனர் என்று எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார். இது அந்த கட்சி வட்டாரத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரிஜ்பூஷண் சரண் தரக்குறைவாக விமர்சனம் செய்தார். அப்போது காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்