ஜார்க்கண்டில் கடத்தப்பட்ட 4 போலீஸார் மீட்பு

By செய்திப்பிரிவு

ஜார்க்கண்ட் மாநிலம் கூண்டி மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருப்பவர் கரிய முண்டா. இவரது வீட்டுக்கு காவலில் இருந்த 4 போலீஸார் 3 நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்டனர். அரசுக்கு எதிரான பதல்கடி என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் போலீஸாரை கடத்தியதாகத் தெரியவந்தது.

கரிய முண்டா வீட்டுக்கு அருகே பதல்கடி அமைப்பைச் சேர்ந்தவர்கள் பேரணி நடத்தினர். அப்போது திடீரென வீட்டில் புகுந்து அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸாரை கடத்தினர். சம்பவம் நடந்தபோது வீட்டில் கரியமுண்டா இல்லை.

கடத்தப்பட்ட போலீஸாரை மீட்கும் பணியில் போலீஸ் படைகள் ஈடுபட்டன என்று போலீஸ் டிஜிபி டி.கே. பாண்டே தெரிவித்தார். இதனிடையே கடத்தப்பட்ட 4 பேரும் வனப்பகுதியிலிருந்து நேற்று மீட்கப்பட்டனர். மேலும் பதல்கடி ஆதரவாளர்கள் சிலரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

33 mins ago

விளையாட்டு

28 mins ago

கல்வி

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்