தூங்கிக் கொண்டிருந்த ராணுவ வீரர்களிடம் கொள்ளை: ரயில்நிலைய ஓய்வறையில் கொள்ளையர்கள் அட்டூழியம்

By பிடிஐ

ஓய்வறையில் தூங்கிக்கொண்டிருந்த இரண்டு ராணுவத்தினரின் துணிமணிகள் உள்ளிட்ட அத்தனை பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பழைய டெல்லி ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலை 4.00 மணிக்கு நடந்துள்ளது.

ரயில் பயணம் மேற்கொண்டுவிட்டு ஓய்வறையில் இரண்டு ராணுவத்தினர் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுடன் இன்னும் சிலரும் அங்கே தூங்கிக்கொண்டிருந்தனர்.

அவர்களில் யாரோ சிலர் பயணிகளைப் போல நடித்து அவர்களது அடையாள அட்டைகள், கடிகாரங்கள், செல்போன்கள் மற்றும் அவர்களது துணிமணிகள் அனைத்தையும் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பழைய டெல்லி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ரயில்வே துறையின் டெல்லி பிரிவு இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 mins ago

விளையாட்டு

12 mins ago

இந்தியா

6 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

3 mins ago

விளையாட்டு

19 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

30 mins ago

இந்தியா

43 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

7 hours ago

மேலும்