ஓய்வறையில் தூங்கிக்கொண்டிருந்த இரண்டு ராணுவத்தினரின் துணிமணிகள் உள்ளிட்ட அத்தனை பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பழைய டெல்லி ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலை 4.00 மணிக்கு நடந்துள்ளது.
ரயில் பயணம் மேற்கொண்டுவிட்டு ஓய்வறையில் இரண்டு ராணுவத்தினர் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுடன் இன்னும் சிலரும் அங்கே தூங்கிக்கொண்டிருந்தனர்.
அவர்களில் யாரோ சிலர் பயணிகளைப் போல நடித்து அவர்களது அடையாள அட்டைகள், கடிகாரங்கள், செல்போன்கள் மற்றும் அவர்களது துணிமணிகள் அனைத்தையும் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பழைய டெல்லி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ரயில்வே துறையின் டெல்லி பிரிவு இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 mins ago
விளையாட்டு
12 mins ago
இந்தியா
6 mins ago
தமிழகம்
11 mins ago
தமிழகம்
3 mins ago
விளையாட்டு
19 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
30 mins ago
இந்தியா
43 mins ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
இந்தியா
7 hours ago