ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரியாஸி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வைஷ்ணவி தேவி கோயிலுக்கு மாற்று வழி அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக மே 19-ம் தேதி தொடங்கிவைக்கிறார்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாற்று வழியில் ஜம்மு-காஷ்மீர் ஆளுநரும், ஸ்ரீமாதா வைஷ்ணவி தேவி கோயில் வாரியத்தின் தலைவருமான என்.என். வோரா நேற்று முன்தினம் பயணித்து கோயிலை அடைந்தார்.
கோயிலுக்குச் செல்ல மாற்று வழி அமைக்கும் திட்டத்தை கோயில் வாரியம் 2011-ம் ஆண்டு பரிந்துரைத்தது. ஒரே பாதையை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயன்படுத்துவதால் மாற்றுப் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 7 கிலோமீட்டருக்கு மலையில் சாலை அமைக்கப்பட்டு நேற்றுமுன்தினம் திறக்கப்பட்டது. ரூ.80 கோடி செலவில் 7 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றுவழிப் பாதையை 19-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார் என்று கோயில் வாரிய கூடுதல் தலைமைச் செயல் அதிகாரி அன்ஷுல் கார்க் தெரிவித்தார். மாற்றுப் பாதையில் ஓட்டல்கள், மருத்துவமனைகள், ஏடிஎம், குடிநீர், கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் வழக்கமாக செல்லும் தாராகோட் மார்க் வழியாகவும் அனுமதிக் கப்படவுள்ளனர்.
மேலும் ரூ.12 கோடியில் ரோப்கார் வசதியும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது. - பிடிஐ
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 mins ago
தமிழகம்
38 mins ago
விளையாட்டு
33 mins ago
கல்வி
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago