பிளஸ் 2 மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகளை இன்று (ஆக.3) வெளியிட உள்ளதாக அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பு:

கடந்த மே மாதம் நடத்தப்பட்ட பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை எழுதி, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்த மாணவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆக.3-ம் தேதி (இன்று) காலை11.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இந்த பட்டியலில் இடம்பெறாத மாணவர்களின் விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை. மறுகூட்டல், மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும், மேற்கண்ட இணையதளத்தில் தங்களது பதிவெண், பிறந்த தேதி விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 min ago

விளையாட்டு

5 mins ago

இந்தியா

9 mins ago

உலகம்

16 mins ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்