ராமநாதபுரம் அருகே ரூ. 1.33 லட்சம் கள்ள நோட்டுகளுடன் ஊர்க்காவல் படை வீரர் கைது

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ரூ.1.33 லட்சம் கள்ள நோட்டுகளுடன் ஊர்க்காவல் படை வீரரை போலீஸார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகே மோர்பண்ணை கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த வைரவன் என்பவரது மகன் ராஜேஸ்வரன்(28). இவர் தொண்டி கடற்கரை காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படை வீரராகப் பணிபுரிகிறார்.

திருவாடானை காவல் உட்கோட்ட குற்றப்பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி ராஜேஸ்வரனை நேற்று பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் இருந்து ரூ.1,33,500 மதிப்புள்ள 267 எண்ணிக்கையிலான 500 ரூபாய் கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தொடர்புடைய மற்ற சிலரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

17 mins ago

தமிழகம்

28 mins ago

வாழ்வியல்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்