அவிநாசி அருகே பெண் கொலை: போலீஸ் விசாரணை

By செய்திப்பிரிவு

திருப்பூர்: அவிநாசி அருகே தெக்கலூரில் பெண் அடித்து கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

பல்லடம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் சுகன்யா (30). விசைத்தறி தொழிலாளியான இவருக்கு ஏற்கெனவே இருமுறை திருமணம் நடைபெற்ற நிலையில், 3-வதாக கருமத்தம்பட்டி ராயர்பாளையம் பகுதியைச் சரவணக்குமாருடன் (40) வாழ்ந்து வந்துள்ளார்.

இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில், இருவரும் அவிநாசி வந்துள்ளனர். இதற்கிடையே, தெக்கலூர் பேருந்து நிறுத்தம் அருகே வரும்போது மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, சரவணக்குமார் தாக்கியதில், சுகன்யா உயிரிழந்துள்ளார். சுகன்யாவின் சடலத்தை தெக்கலூர் குப்பைக் கிடங்கில் வீசிவிட்டு, சரவணக்குமார் தலைமறைவாகியுள்ளார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு அவிநாசி போலீஸார் சென்று, சுகன்யா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான சரவணக்குமாரை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்