தேனியில் கருக்கலைப்பால் இளம்பெண் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

தேனி அருகே உப்புக் கோட்டையைச் சேர்ந்தவர் பாண்டிபாபு. இவரது மனைவி இந்துராணி (22). இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இந்துராணி மீண்டும் கர்ப்பம் ஆனார். 3 மாத கர்ப்பிணியாக இருந்த இவர் தேனி அரண்மனைப் புதூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

சிசுவின் வளர்ச்சி குறைவாக இருந்ததால் கருவைக் கலைத்துவிடும்படி மருத்துவர் தெரிவித்துள்ளார். இதன்படி கருக்கலைப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் இவரது உடல்நிலை மோசமானதால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இந்துராணி வழியிலே இறந்து விட்டதாகக் கூறினர்.

இதனால், ஆத்திரமடைந்த உற வினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய விசாரணை நடத்தப்படும் என போலீஸார் உறுதி அளித்தனர். இதனால், மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

கணவர் பாண்டிபாபு அளித்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

கல்வி

20 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

43 mins ago

வாழ்வியல்

49 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

மேலும்