டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: காரைக்குடியில் அரசு ஊழியரிடம் போலீஸ் தீவிர விசாரணை

By இ.ஜெகநாதன்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அரசு ஊழியர் ஒருவரிடம் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதை அடுத்து, சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த முறைகேடு தொடர்பாக இதுவரை 14 பேரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை காவல்துறையில் பணிபுரியும் சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணனூரைச் சேர்ந்த சித்தாண்டி குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் குரூப் 2 ‘ஏ’, குரூப் 4 தேர்வுகளில் மாநில அளவில் முதல் பத்து இடங்களில் தேர்ச்சி பெற்றிருப்பது சிபிசிஐடி போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் இன்று சென்னையில் இருந்து சிவகங்கை வந்த சிபிசிஐடி தனிப்படை போலீஸார் காரைக்குடி முத்துப்பட்டணம் இணை சார்-பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் உதவியாளர் வேல்முருகன் என்பவரிடம் விசாரணை செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அவர் கைதாக அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இவர் சித்தாண்டியின் தம்பி என்பதும், கடந்த ஆண்டு குரூப் 2 தேர்வில் மாநில அளவில் 3-வது இடம் பெற்றுள்ளார் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரது குடும்பத்தில் முறைகேடாக தேர்வில் வெற்றி பெற்ற மற்றவர்களையும் விசாரிக்க வாய்ப்புள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

35 mins ago

க்ரைம்

39 mins ago

இந்தியா

37 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்