பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து பிந்து மாதவி வெளியேற்றப்பட்டுள்ளார்.
நாளை (செப்டம்பர் 30) பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. ஒவ்வொரு வாரமும் கலந்து கொண்ட போட்டியாளர்களில் இருந்து ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு வந்தார்கள்.
இறுதிப் போட்டியில் சிநேகன், பிந்துமாதவி, ஹரிஷ், ஆரவ் மற்றும் கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் இருந்தனர். இந்நிலையில், இறுதியாக வெளியேற்றப்படுவார் யார் என்பதற்கான நிகழ்வு நடைபெற்றது.
முன்னதாக, நீங்களாகவே வெளியேறினீர்கள் என்றால் 15 லட்சம் வரை கொடுக்கப்படும் என்று பேசப்பட்டது. ஆனால், போட்டியாளர்கள் 5 பேருமே வெளியேற மறுத்துவிட்டார்கள்.
இறுதியில், பிந்துமாதவி வெளியேற்றப்படுவதாக பிக் பாஸ் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து மற்ற 4 பேரும் அவரை வழியனுப்பி வைத்தனர். தற்போது சிநேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் ஹரிஷ் ஆகியோரில் ஒருவர் வெற்றியாளர் என்பது உறுதியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
18 mins ago
விளையாட்டு
13 mins ago
கல்வி
33 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
56 mins ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago