கமல் கருத்துக்காக மிரட்டல் விடுப்பது சிறுபிள்ளைத்தனம்: பார்த்திபன் கருத்து

By ஸ்கிரீனன்

கமல் கருத்துக்காக மிரட்டல் விடுப்பது சிறுபிள்ளைத்தனமானது என்று பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்திருப்பதாக கமல் தெரிவித்தார். இதற்கு தமிழக அமைச்சர்கள் பலரும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். கமலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் ஆதரவுக் குரல் கொடுத்து வருகிறார்கள்.

கமலுக்கு ஆதரவாக நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் பேசியிருப்பதாவது:

கமல் சார் கூறும் கருத்துக்களில் உடன்பாடில்லை என்றால் விட்டுவிட வேண்டும். அதை விடுத்து கருத்தே சொல்லக்கூடாது என்பதற்கு சுதந்திரமே தேவையில்லை. அரசை ஆதரிப்பதோ, எதிர்ப்பதோ, ஒரு தனி மனிதனுடைய கருத்து முழுமையாக பதிவு செய்யப்பட வேண்டும். இதை கமல் சார் என்பதற்காக மட்டும் சொல்லவில்லை.

மக்களிடம் நம்முடைய கருத்துகளை எல்லாம் கொண்டு போய் சேர்க்கிறோம். எது சரியோ அதை அவர்கள் எடுத்துக் கொள்ளப் போகிறார்கள். கமல் சாரின் கருத்துக்காக மிரட்டல் விடுப்பது எல்லாம் சிறுபிள்ளைத்தனமாகத் தான் இருக்கிறது

இவ்வாறு பார்த்திபன் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

9 hours ago

வலைஞர் பக்கம்

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்