'பாகுபலி'யை மிஞ்சும் படம் தமிழில் படைக்க வேண்டும் என்று இயக்குநர் சேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்போடு, ஏப்ரல் 28-ம் தேதி வெளியான படம் 'பாகுபலி 2'. ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர், ராணா, தமன்னா நடிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் பெரும் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது 'பாகுபலி 2'. இப்படம் குறித்து பல்வேறு திரையுலகினர் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
தற்போது இயக்குநர் சேரன் "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்..... பாகுபலியை மிஞ்சும் ஒரு திரைப்படம் தமிழில் பண்ணவேண்டும். தமிழர்களின் சரித்திரத்தில் அத்தனை கதைகள் உள்ளன" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் இயக்குநர் சேரன்
முக்கிய செய்திகள்
தமிழகம்
34 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
3 hours ago
க்ரைம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
4 hours ago
வணிகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
12 hours ago