‘சூரரைப்போற்று’ படத்துக்காக தேசிய விருது பெற்றார் சூர்யா 

By செய்திப்பிரிவு

'சூரரைப்போற்று' படத்துக்காக நடிகர் சூர்யாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசிய விருது வழங்கினார்.

கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய விருது பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதற்கான விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்று வருகிறது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, விருதாளர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கி வருகிறார்.

சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப்போற்று' திரைப்படத்திற்கு ஐந்து விருதுகளும், 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' திரைப்படத்திற்கு மூன்று விருதுகளும், 'மண்டேலா' திரைப்படத்திற்கு 2 விருதுகளும் வழங்கப்பட்டது. இந்நிலையில், நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. அதனை அவரது மனைவி ஜோதிகா தனது செல்போனில் புகைப்படம் எடுத்ததை ரசிகர்கள் ட்விட்டரில் ஷேர் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

18 mins ago

க்ரைம்

22 mins ago

இந்தியா

20 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்