கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், அவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் கூறி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகை ரம்பா மனுதாக்கல் செய்துள்ளார். தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக 1990-களில் வலம்வந்தவர் நடிகை ரம்பா. ‘உள்ளத்தை அள்ளித்தா’ , ’நினைத் தேன் வந்தாய்’, காதலா காதலா’ உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். இவருக்கும் கனடாவைச் சேர்ந்த இந்திரன் பத்மநாதனுக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இடையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்து திருமணச் சட்டம் பிரிவு 9-ன் பிரகாரம் தான் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், தன்னை கணவருடன் சேர்த்து வைக்கக் கோரியும் சென்னை மாவட்ட 2வது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகை ரம்பா மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணையை டிசம்பர் 3-ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
முக்கிய செய்திகள்
வர்த்தக உலகம்
1 min ago
தமிழகம்
27 mins ago
சினிமா
22 mins ago
இந்தியா
44 mins ago
சினிமா
54 mins ago
தமிழகம்
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
59 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago