ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்குகிறது 'நானே வருவேன்' படப்பிடிப்பு

By செய்திப்பிரிவு

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் 'நானே வருவேன்' படப்பிடிப்பு ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்குகிறது.

'என்.ஜி.கே' படத்துக்குப் பிறகு, தனுஷ் நடிக்கவுள்ள 'நானே வருவேன்' படத்தின் முதற்கட்டப் பணிகளை கவனித்து வருகிறார் செல்வராகவன். தாணு தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணா, இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்தப் படத்துக்கான போட்டோ ஷூட்டை முடித்துவிட்டார் செல்வராகவன். ஆனால், படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது. கரோனா 2-வது அலை அச்சுறுத்தலால் திட்டமிடப்பட்ட படப்பிடிப்பும் ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது கரோனா அலை குறைந்து வருவதால், ஆகஸ்ட் 20-ம் தேதி 'நானே வருவேன்' படப்பிடிப்பு தொடங்கும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படப்பிடிப்பு தொடங்குவதற்குள் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் 'சாணிக் காயிதம்' படப்பிடிப்பை முடித்துக் கொடுக்கவுள்ளார்.

அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் 'சாணிக் காயிதம்' படத்தில் செல்வராகவனுடன் கீர்த்தி சுரேஷும் நடித்து வருகிறார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்தே, பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 mins ago

க்ரைம்

10 mins ago

சுற்றுச்சூழல்

46 mins ago

க்ரைம்

50 mins ago

இந்தியா

48 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்