ஏப்.14-ல் வருவது ரஜினியா, விஜய்யா?- விநியோகஸ்தர்கள் குழப்பம்

By ஸ்கிரீனன்

ஏப்ரல் 14ம் தேதி ரஜினியின் 'கபாலி' அல்லது விஜய் படம் இவ்விரண்டில் எது வெளிவர இருக்கிறது என்று விநியோகஸ்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 'கபாலி', அட்லீ - விஜய் படம் ஆகிய இரண்டு படங்களையும் தயாரித்து வருகிறார் தாணு. மலேசியாவில் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பும், சென்னையில் அட்லீ - விஜய் படப்பிடிப்பும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

அட்லீ - விஜய் படத்தின் படப்பிடிப்பு முன்னரே தொடங்கப்பட்டுவிட்டதால் முதலில் அதன் படப்பிடிப்பு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு ஜனவரி வரை நடைபெற இருக்கிறது. மலேசியாவில் இன்னும் சுமார் 25 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், ஏப்ரல் 14ம் தேதி தாணு எந்த படத்தை வெளியிட இருக்கிறார் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இரண்டுமே பிரம்மாண்டமான தயாரிப்பு என்பதால், சரியாக திட்டமிட்டு தான் வெளியிடுவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.

மேலும், ஏப்ரல் 14ம் தேதி ஒரு படத்தையும், அதனைத் தொடர்ந்து கோடை விடுமுறை முடிவதற்குள் மற்றொரு படத்தையும் வெளியிட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்விரண்டு படங்கள் குறித்து விநியோகஸ்தர் ஒருவரிடம் கேட்ட போது, "முதலில் விஜய் சார் படம் தான் வருவது போல தெரிகிறது. 'கபாலி' படத்தின் பிரதான காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது தான் நடைபெற்று வருகிறது. எந்த படம் வெளிவந்தாலும் கண்டிப்பாக எங்களுக்கு நல்ல வசூல் இருக்கும், ஏனென்றால் இரண்டு படங்களுக்குமே நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

8 mins ago

ஜோதிடம்

40 mins ago

ஜோதிடம்

45 mins ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்