எஸ்ஏசி இயக்கத்தில் சமுத்திரக்கனி

By செய்திப்பிரிவு

எஸ்ஏசி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சமுத்திரக்கனி நாயகனாக நடித்து வருகிறார்.

தமிழ்த் திரையுலகில் மூத்த இயக்குநராக, பல்வேறு வெற்றியடைந்த படங்களை இயக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் மகன் விஜய் தற்போது முன்னணி நாயகனாக வலம் வருகிறார்.

இறுதியாக 2019-ம் ஆண்டு 'கேப்மாரி' படத்தை எஸ்ஏசி இயக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். கரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு தமிழக அரசு படப்பிடிப்புக்கு அனுமதியளித்துள்ளது. இதனால் சத்தமின்றி தனது புதிய படத்தின் படப்பிடிப்பை சென்னையில் தொடங்கி நடத்தி வருகிறார் எஸ்ஏசி.

இதில் நாயகனாக சமுத்திரக்கனியும், முக்கியக் கதாபாத்திரத்தில் சாக்‌ஷி அகர்வாலும் நடித்து வருகிறார்கள். ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்க எஸ்ஏசி திட்டமிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

46 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

22 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்