'மூக்குத்தி அம்மன்' படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் யாஷிகா ஆனந்த் இருவரும் கவுரவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'மூக்குத்தி அம்மன்'. இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடத்தி முடித்துள்ளது படக்குழு. இதில் சுமார் 90% படப்பிடிப்பு முடிந்தது.
இதனைத் தொடர்ந்து சென்னையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தனியார் கல்லூரி ஒன்றில் உள்ள அரங்கத்தில் பெரும் கூட்டத்துக்கு நடுவே கருப்புப் புடவை அணிந்து நயன்தாரா நடந்து வருவதுபோல் காட்சிப்படுத்தி வருகிறார்கள்.
இந்தப் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்தப் படப்பிடிப்பில் கவுதம் கார்த்திக் மற்றும் யாஷிகா ஆனந்த் இருவருமே கலந்து கொண்டுள்ளனர். அவர்களை வைத்து சில முக்கியமான காட்சிகளைப் படமாக்கியுள்ளனர்.
வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, மெளலி, ஊர்வசி உள்ளிட்ட பலர் நயன்தாராவுடன் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு க்ரிஷ் இசையமைத்து வருகிறார்.
தவறவிடாதீர்
முக்கிய செய்திகள்
சினிமா
33 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
3 hours ago
ஆன்மிகம்
2 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
விளையாட்டு
4 hours ago