கார்த்திக் நரேன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார்.
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'கர்ணன்' படத்தின் படப்பிடிப்பு, பிப்ரவரி மாத இறுதியில் முடிவடையவுள்ளது. இதனைத் தொடர்ந்து தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் இன்னும் முடிவடையாதக் காரணத்தால், சத்யஜோதி நிறுவனத்துக்கே தனது அடுத்த படத்தின் தேதிகளைக் கொடுத்துவிட்டார் தனுஷ்,
இந்த நிறுவனம் தயாரிப்பில் உருவாகவிருந்த ராம்குமார் படத்துக்கும் முதற்கட்டப் பணிகளுக்கு நாட்கள் அதிகமாகத் தேவைப்பட்டதால், மற்ற இயக்குநர்களிடம் கதை கேட்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இதில் கார்த்திக் நரேன் கூறிய கதை தனுஷ் மற்றும் சத்யஜோதி நிறுவனத்துக்குப் பிடித்திருந்ததால் உடனடியாகப் படம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரியவுள்ளார். இந்தக் கூட்டணியின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், படம் அக்டோபர் மாதம் வெளியாகும் எனவும் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் படம் தனுஷின் 43-வது படமாகும்.
தனுஷின் 40-வது படத்தை கார்த்திக் சுப்புராஜ், 41-வது படத்தை மாரி செல்வராஜ் , 42-வது படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்குகின்றனர். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்துக்கு 'கர்ணன்' என்று தலைப்பு வைக்கப்பட்டது. மற்ற இரண்டு படங்களுக்கும் இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை.
கார்த்திக் நரேன் படத்தைத் தொடர்ந்து, தனுஷின் 44-வது படத்தைத் தயாரிக்கவுள்ளது சன் பிக்சர்ஸ். இதற்கான கதை கேட்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 mins ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
1 hour ago
சுற்றுச்சூழல்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
5 hours ago
வலைஞர் பக்கம்
6 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
7 hours ago