'அரண்மனை 3' அப்டேட்: மீண்டும் இணையும் ஆண்ட்ரியா

By செய்திப்பிரிவு

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவுள்ள 'அரண்மனை 3' படத்தில் ஆண்ட்ரியா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான கடைசி 2 படங்களான 'வந்தா ராஜாவாதான் வருவேன்' மற்றும் 'ஆக்‌ஷன்' ஆகிய இரண்டு படங்களுமே போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனால், மீண்டும் தனது வெற்றிப் பாதைக்கே திரும்பியுள்ளார் சுந்தர்.சி.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் 'அரண்மனை 3' படத்தை இயக்கவுள்ளார் சுந்தர்.சி. இதற்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் ஆர்யா, ராஷி கண்ணா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். தற்போது இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளார் ஆண்ட்ரியா.

'அரண்மனை' முதல் பாகத்தில் ஆண்ட்ரியா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே கதாபாத்திரத்தில் தான் 3-ம் பாகத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 'அரண்மனை 3' படத்துக்கு சத்யா இசையமைக்கவுள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஹிப் ஹாப் ஆதிக்கு தன் படத்திலிருந்து விடை கொடுத்துள்ளார் சுந்தர்.சி.

இந்தப் படத்தினை ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடிக்க, சுந்தர்.சி திட்டமிட்டுள்ளார். அதற்குத் தகுந்தாற் போல் அனைத்து நடிகர்களிடமும் தேதிகள் வாங்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

விளையாட்டு

33 mins ago

க்ரைம்

37 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்