தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது ஏமாற்றம்: இயக்குநர் பேரரசு கவலை

By செய்திப்பிரிவு

நாமக்கல்

தமிழ் திரைப்படங்களுக்கு இம்முறை தேசிய விருது கிடைக்காதது மிகப்பெரிய ஏமாற்றமளிப்பதாக திரைப்பட இயக்குநர் பேரரசு தெரிவித்தார்.

நாமக்கல்லில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்க திரைப்பட இயக்குநர்கள் சங்க பொருளாளரான பேரரசு வந்தார். அப்போது அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

இந்தாண்டு தேசிய விருதில் தமிழ் திரையலகம் தவிர்க்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் சிறந்த திரைப்படம், ஒளிப்பதிவு, கதை என குறைந்தது 8 விருதுகள் கிடைக்கும். இந்த முறை விருது கிடைக்காதது மிகப்பெரிய ஏமாற்றம் அளிக்கிறது.

விருது கிடைக்காதது யோசிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது. திட்டமிட்டு தவிர்க்கப்படுகிறதா, இல்லை உண்மையில் தமிழ் படம் தரமாக இல்லையா என ஆராய வேண்டும். தரமான படமாக இல்லை என்று சொல்ல முடியாது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரனை யாரும் இழுத்து கொண்டு போய் சிறை வைக்கவில்லை.

சேரனின் தனிப்பட்ட முடிவு. அந்த நிகழ்ச்சியில் சேரன் இருக்கக்கூடாது என கூற யாருக்கும் தகுதியில்லை, என்றார்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

56 mins ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

5 hours ago

வலைஞர் பக்கம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்