‘தெனாலிராமன்’ படத்தை அடுத்து நடிகர் வடிவேலு ‘எலி’ என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் யுவராஜ் தயாளன் இயக்குகிறார். தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான வடிவேலு, கடந்த 3 ஆண்டுகளாக படங்களில் அதிகம் நடிக்காமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் அவர் நாயகனாக நடித்த ‘தெனாலிராமன்’ படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில் அவர் நாயகனாக நடிக்கும் ‘எலி’ என்ற படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. 1970 களின் காலகட்ட பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது.
இதில் வடிவேலு முழுக்க முழுக்க மதுரைத் தமிழில் பேசி நடிக்கிறார். அவர் நடிக்கும் காட்சிகள் தற்போது படமாகி வருகிறது. மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களைப் போன்று திரில்லர் கலந்த காமெடி படமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.
முழுக்க முழுக்க சென்னையில் படமாக்கத் திட்டமிட்டிருக்கும் இந்தப்படம் வருகிற கோடை விடுமுறைக்கு ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவினர் கூறினர்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
1 min ago
க்ரைம்
5 mins ago
இந்தியா
3 mins ago
சினிமா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
சுற்றுலா
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
49 mins ago
தமிழகம்
2 hours ago