சிகாகோவில் இன்று நடக்கும் உலகத் தமிழ்ச் சங்க மாநாட்டில் நடிகர் ஆரியின் ‘சுந்தர தாய்மொழி’ என்ற குறும்படம் திரையிடப்பட உள்ளது. அந்த நிகழ்ச்சியில் ‘ஆரிமுகம்’ என்ற தனது தயாரிப்பு நிறுவன தொடக்க விழாவையும் நடிகர் ஆரி நடத்த உள்ளார்.
இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் விஷயமாக ‘சுந்தர தாய்மொழி’ எனும் குறும்படத்தைத் தயாரித்து நடித்துள்ளார். இதை குரு
என்.நாராயணன் இயக்கியுள்ளார். ‘நெடுஞ்சாலை’ திரைப்பட இசையமைப்பாளர் சத்யா இசை அமைத்துள்ளார். உலகத் தமிழ்ச் சங்க மாநாட்டில் ‘கீழடி நம் தாய்மடி’ என்ற மையக் கருத்தை வலியுறுத்தி நடைபெறும் இவ்விழாவில் சாலமன் பாப்பையா பட்டிமன்றம் நடக்கிறது. அதில் பேச்சாளர்கள் ராஜா, சீர்காழி சிவசிதம்பரம் முதலிய பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர். நிகழ்வில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 mins ago
இந்தியா
26 mins ago
தமிழகம்
42 mins ago
இந்தியா
37 mins ago
இந்தியா
50 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
9 hours ago