Published : 05 May 2024 01:11 AM
Last Updated : 05 May 2024 01:11 AM

ஐஎஸ்எல் கால்பந்து தொடர் | மோகன் பகானை வீழ்த்தி கோப்பை வென்றது மும்பை சிட்டி எப்சி

மும்பை சிட்டி வீரர்கள்

கொல்கத்தா: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது மும்பை சிட்டி எப்சி அணி. அதோடு கோப்பையை வென்றும் அசத்தியது.

சனிக்கிழமை அன்று கொல்கத்தா நகரில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் ஆட்டத்தின் முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட் அணி. அந்த அணியின் ஜேசன் கம்மிங்ஸ் 44-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்தார்.

அதை சமன் செய்யும் வகையில் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கோல் பதிவு செய்தது மும்பை சிட்டி. 53-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தார் மும்பை சிட்டி வீரர் ஜார்ஜ். தொடர்ந்து 81-வது நிமிடத்தில் பிபின் சிங் இரண்டாவது கோலை பதிவு செய்தார். கூடுதல் நேரத்தில் ஜேகப் பந்தை வலைக்குள் தள்ளி இருந்தார். இதன் மூலம் 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது மும்பை சிட்டி.

ஆட்டத்தில் சுமார் 58 சதவீதம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது மும்பை சிட்டி. அதன் மூலம் சுமார் 365 பாஸ்களை அந்த அணி மேற்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் மும்பை அணியின் அட்டாக்கிங் ஆட்டத்தை சிறப்பாக தடுத்திருந்தனர் மோகன் பகான் அணியின் தடுப்பாட்ட வீரர்கள். இருந்தும் இரண்டாவது பாதியில் அதை மும்பை சிட்டி தகர்த்திருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x