இயக்குநர் மகேந்திரனுக்கு சமர்ப்பணம்!

By செய்திப்பிரிவு

ஏ.சி.முகில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ், மறைந்த இயக்குநர் மகேந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் முழு படப்பிடிப்பு வேலைகள் முடிந்து, தற்போது இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகின்றன.  டி.இமான் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் பாடலாசிரியர் விவேகா, ‘மகராணியே மஞ்சள் வண்ணப் பூவே’ என்று தொடங்கும் பாடல் ஒன்றை எழுதியுள்ளார். தாத்தா, பேத்தி இருவரது அன்பை வெளிப்படுத்தும் விதமாக உருவாகியுள்ள இப்பாடலை படக்குழு இயக்குநர் மகேந்திரனுக்கு சமர்ப்பித்துள்ளது.

இதுகுறித்து  படத்தின் இயக்குநர் ஏ.சி.முகில் செல்லப்பன் கூறியதாவது:  இப்படத்தில் உள்ள 4 பாடல்களில் தாத்தாவுக்கும், பேத்திக்குமான உறவை பிரதிபலிக்கும் பாடல் இது.  இந்தக் காட்சியில் நடித்துள்ள இயக்குநர் மகேந்திரன் சார் இப்போது  நம்மிடையே இல்லை என்பது அவ்வளவு வலி தருகிறது. இந்நிலையில், இப்பாடலை இயக்குநர் மகேந்திரனின் நினைவை போற்றும் விதமாக  அவருக்கே சமர்ப்பணம் செய்திருக்கிறோம்!’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

32 mins ago

தமிழகம்

52 mins ago

இந்தியா

8 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

உலகம்

3 hours ago

மேலும்