‘பிக் பாஸ்’ ஆரவ் ஹீரோவாக அறிமுகமாகும் படத்துக்கு ‘ராஜபீமா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ஓ காதல் கண்மணி’ படத்தில், துல்கர் சல்மானுடன் பணியாற்றுபவராக மிகச்சிறிய வேடத்தில் நடித்தவர் ஆரவ். அதன்பிறகு ‘சைத்தான்’ படத்தில் முகம் தெரிகிற வேடத்தில் நடித்தார். ‘ஒரு கப் காஃபி’ என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார்.
கடந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதன் மூலம், மிகப்பெரிய அளவில் பாப்புலாரிட்டி கிடைத்தது. அதுவும் ஆரவ் - ஓவியா காதல், இன்றளவும் பேசப்படும் ஒரு விஷயமாக இருக்கிறது.
கடந்த வருடம் நடைபெற்ற சீஸனில் வெற்றிபெற்று, டைட்டிலை தட்டிச் சென்றதும் ஆரவ் தான். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு பல படங்களில் அவர் ஹீரோவாக நடிப்பார், மிகப்பெரிய உயரத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில், ஆரவ் ஹீரோவாக அறிமுகமாகும் படத்துக்கு ‘ராஜபீமா’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். நரேஷ் சம்பத் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, சைமன் கே கிங் இசையமைக்கிறார்.
சுரபி ஃபிலிம்ஸ் சார்பில் எஸ்.மோகன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். படத்தின் போஸ்டரில், யானையுடன் ஆரவ் இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. எனவே, யானைக்கும் ஹீரோவுக்கும் இடையிலான பந்தத்தை மையப்படுத்திய கதை என்று கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
42 mins ago
ஜோதிடம்
46 mins ago
இந்தியா
5 hours ago
விளையாட்டு
6 hours ago
க்ரைம்
7 hours ago
உலகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
வேலை வாய்ப்பு
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
9 hours ago
கல்வி
10 hours ago