கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில், குரு சோமசுந்தரமும் நடிக்கிறார்.
‘2.0’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அவரின் 165-வது படமான இதற்கு, இன்னும் பெயரிடப்படவில்லை. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்கிறார்.
ரஜினியுடன் இணைந்து நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, த்ரிஷா, மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி, ராம்தாஸ், ராமச்சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர். ஊட்டியை கதைக்களமாகக் கொண்டு இந்தப் படம் தயாராகி வருகிறது.
டேராடூன், டார்ஜிலிங்கைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. மீனம்பாக்கத்தில் உள்ள பின்னி மில்லில் நடைபெற்ற படப்பிடிப்பு, நேற்று முன்தினம் முடிவடைந்தது. அடுத்ததாக, லடாக்கில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், இந்தப் படத்தில் குரு சோமசுந்தரம் இணைந்துள்ளார். ஏற்கெனவே கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா’ படத்தில் இவர் நடித்துள்ளார். ‘ஜோக்கர்’ படத்தில் மன்னர் மன்னனாக நடித்ததன் மூலம் குரு சோமசுந்தரம் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றவர்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
15 mins ago
க்ரைம்
19 mins ago
இந்தியா
17 mins ago
சினிமா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
சுற்றுலா
1 hour ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
ஓடிடி களம்
1 hour ago
தமிழகம்
3 hours ago