இன்று (மார்ச் 8) உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மகளில் நலனுக்காக ‘சேவ் சக்தி’ என்ற அமைப்பை நடத்திவரும் நடிகை வரலட்சுமி சரத்குமாரிடம், ‘உங்களுக்குப் பிடித்த 5 பெண்கள் யார்?’ எனக் கேட்டேன். ஷூட்டிங் பிரேக்கில் அவர் பட்டியலிட்ட பெண்கள் இதோ…
சாயாதேவி : என்னுடைய அம்மா. மிகவும் வலிமையான பெண்மணி. எனக்கு தைரியத்தைத் தந்தவர். நான் இன்றைக்கு இந்த அளவுக்கு தன்னம்பிக்கையுடம் இருக்க முழுக்காரணமும் அவர்தான்.
அன்னை தெரசா : மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். நாம் எந்த அளவுதான் மற்றவர்களுக்கு உதவி செய்தாலும், அவர் அளவுக்கு செய்ய முடியுமா என்பது சந்தேகமே!
இளவரசி டயானா : மக்களிடம் அதிகாரத்தோரணை காட்டிய ராஜ குடும்பத்தில், அவர்களிடம் அன்பாகப் பேசி இதயத்தில் இடம்பிடித்த முதல் ராஜ குடும்பத்துப் பெண். எல்லோரையும் சமமாகப் பாவித்தவர்.
ஜெயலலிதா : பெண்ணாக இருந்து தமிழ்நாட்டை சிறப்பாக ஆட்சி செய்தவர். எதைக் கண்டும் அஞ்சாது, துணிவுடன் நின்று போராடியவர்.
இந்திராகாந்தி : இந்தியாவின் முதல் பிரதம மந்திரி. இந்த நாட்டையே ஒரு பெண் ஆள்வது என்பது மிகச்சிறந்த விஷயம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
சினிமா
38 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
45 mins ago
சுற்றுலா
57 mins ago
தமிழகம்
59 mins ago
சினிமா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
25 mins ago