காமெடியில் களமிறங்கும் நாகேஷ் பேரன்

By செய்திப்பிரிவு

நாகேஷின் பேரனும், ஆனந்த்பாபுவின் மகனுமான பிஜேஷ் நாகேஷ் தொடர்ந்து காமெடி கதாபாத்திரம் ஏற்று நடிப்பதில் பிஸியாகியுள்ளார். சந்தானம் நடிப்பில் வெளிவர உள்ள ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் சமையல்காரராகவும், ‘எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்’ படத்தில் விஞ்ஞானியாகவும், பிரபுதேவா நடிப்பில் உருவாகிவரும் ‘பொன் மாணிக்கவேல்’ படத்தில் போலீஸாகவும் நடிக்கிறார்.

“முதல் பேரன் என்பதால், தனது பெயரும் என் பெயருடன் சேர்ந்திருக்கணும் என்பது தாத்தாவின் ஆசை. காமெடியில் அவரோட உயரம் என்னன்னு எல்லோருக்குமே தெரியும். அவரது பேரைக் காப்பாத்தினாலே அது பெரிய சாதனை என நினைக்கிறேன். முழுக்க காமெடி களம்தான் எனக்கு சரியா வரும் என்று இப்போது தொட்டிருக்கேன்.

அப்பா, ‘மவுனராகம்’ டிவி சீரியல், தற்போது ‘பியார் பிரேமா காதல்’ பட வெற்றி என மிகவும் மகிழ்ச்சியாக இருக்கார். இவங்க எல்லாரும் பக்க பலமாக இருக்காங்க என்ற நம்பிக்கையில் சினிமாவுக்குள் வந்திட்டேன். ‘பொன் மாணிக்கவேல்’ படத்தில் நான் வரும் சில காட்சிகளைப் பார்த்துட்டு பிரபுதேவா பாராட்டினார். ரொம்ப ஹேப்பி. இனி ரசிகர்கள்தான் என் நடிப்பை பார்த்துட்டு சொல்லணும்’’ என்கிறார் பிஜேஷ் நாகேஷ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

29 mins ago

கருத்துப் பேழை

50 mins ago

தமிழகம்

48 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்