ஐஸ்வர்யா ராஜேஷ் இப்போது என் ரசிகையாகி இருக்கிறார். ஆனால், ’காக்கா முட்டை’ படத்திலிருந்தே நான் அவருடைய ரசிகை. ரொம்ப திறமையானவர் என்று கீர்த்தி சுரேஷ் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாமி ஸ்கொயர்’. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஷிபு தமீன்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் கீர்த்தி சுரேஷ் பேசியதாவது:
‘சாமி’ என்ற படத்தில் நான் இருக்கிறேன் என்பதே பெருமையாக இருக்கிறது. ஹரி சாருடன் பணிபுரியும் போது நேரம் நிர்வாகிப்பதை எளிதாக கற்றுக் கொள்ளலாம். அனைத்து தயாரிப்பாளர்களும் அவரைப் பாராட்டும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அவருடைய படப்பிடிப்பு தளமே பரபரப்பாக இருக்கும்.
நான் அடிக்கடி அண்ணா.. அண்ணா என்று கூப்பிடுவது சூரியை மட்டும் தான். எனக்கு அவருடனான காட்சிகள் நிறைய இருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் இப்போது என் ரசிகையாகி இருக்கிறார். ஆனால், ’காக்கா முட்டை’ படத்திலிருந்தே நான் அவருடைய ரசிகை. ரொம்ப திறமையானவர். தற்போது ப்ரியன் சாரை ரொம்ப மிஸ் பண்றேன். படத்தின் பாதி படப்பிடிப்பில் தான் காலமாகிவிட்டார்.
’அந்நியன்’ படத்திலுள்ள ரெமோ போஸ்டர் என் அறையில் வைத்திருப்பேன். இப்போது அவருடனே நடித்திருப்பதில் மகிழ்ச்சி. எப்போதுமே அவ்வளவு எனர்ஜியுடன் இருப்பார். அனைத்தையும் தாண்டி அவர் ஒரு வழிகாட்டி.
இப்படத்தில் தேவி ஸ்ரீபிரசாத் இசையில் பாடலொன்றைப் பாடியிருக்கிறேன். இதற்கு தயாரிப்பாளர் ஷிபு தான் காரணம்.
இவ்வாறு அவர் பேசினார்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 mins ago
இந்தியா
12 mins ago
இந்தியா
21 mins ago
உலகம்
32 mins ago
இந்தியா
41 mins ago
இந்தியா
35 mins ago
இந்தியா
58 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago