யார் தலைவன்?தனுஷ் கருத்து

By செய்திப்பிரிவு

சென்னையில் 10-வது விஜய் தொலைக்காட்சி விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடந்தது. இதில் சிவகுமார், ஏ.ஆர்.ரஹ்மான், விஜய்சேதுபதி, அனிருத், தனுஷ், நயன்தாரா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றனர். இதில், கடந்த ஆண்டுக்கான சிறந்த என்டர்டெய்னர் விருது தனுஷுக்கு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் பேசியபோது, ‘‘சினிமாவில் ஜெயிக்க சரியான ஆசிர்வாதமும், முயற்சியும் அவசியம். நம்ம வேலையை நாம சரியாக செய்து, முயற்சி செய்தால், வாய்ப்பு தானாக வரும்.

‘சிவாஜி’ உட்பட பல படங்களில் தலைவர் ரஜினியை பயங்கர ஸ்டைலாக கோட் சூட் போட்டு பார்த்துட்டோம். ‘காலா’ படத்தில் தரை லோக்கலாக இறங்கி நடித்திருக்கிறார். ஒருவர் 10 பேரை எதிர்த்தால் வீரன். 10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் தலைவன். தமிழகத்தில் இன்று இருக்கும் நிலைமையைப் பார்க்கும்போது, நான் என்ன சொல்ல வர்றேன்னு எல்லாருக்கும் புரியும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்