ரசிகர்களை முட்டாளாக்கி வைத்திருக்கிறார்: ரஜினி மீது பாரதிராஜா தாக்கு

By செய்திப்பிரிவு

‘ரசிகர்களை முட்டாளாக்கி வைத்திருக்கிறார்’ என இயக்குநர் பாரதிராஜா நடிகர் ரஜினிகாந்தை தாக்கிப் பேசியுள்ளார்.

‘காட்டுப்பய சார் இந்தக் காளி’ படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று காலை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பாரதிராஜா, “தற்போது வெளியாகும் பெரும்பாலான தலைப்புகளில் எனக்கு உடன்பாடில்லை. ‘காட்டுப்பய சார் காளி’ என்பதைவிட, ‘கண்ணியமான காளி’ என்று வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

‘காட்டுப்பய காளி’ என்று டயலாக் பேசியவர்தான் இன்று நாட்டை ஆளணும் என்கிறார். நாமே ஒரு படம் கொடுத்து, வசனம் சொல்லிக் கொடுத்து, பாட்டு சொல்லிக் கொடுத்து, ‘ஆ... ஊ..’ன்னு கத்தவிட்டு, கையில் ரெண்டு செயின் கொடுத்து, மக்களை முட்டாளாக்கி... கடைசியில் நாட்டை ஆளணும்னு வந்துடுறீங்க.

ரசிகன் பாவம்... விவரம்கெட்ட பய. இன்னும் பாருங்க முட்டாளாக்கி வச்சிருக்கோம். பாலாபிஷேகம் பண்ணும்போது அவர் தடுத்து நிறுத்தியிருக்கணும். ‘கட் அவுட்டுக்கு மாலை கூடாது, கண்ணியமாகப் படம் பார்’ என்று சொல்லியிருந்தால் பேசாமல் இருந்திருப்பார்கள்.

ரசிகனைக் கெளப்பிவிட்டு, மேக்ஸிமம் முட்டாளாக்கிவிட்டு... ‘இப்ப நான் வரேன்’னா அவன் என்ன பண்ணுவான்? ‘வா... வா...’ன்னு தான் கூப்பிடுவான். ரொம்பக் கேவலமான ஒரு சூழ்நிலை. சினிமாவில் இருந்துக்கிட்டு நானே இதெல்லாம் பேச வேண்டியிருக்கு” என்றார்.

ரஜினி பெயரை பாரதிராஜா பயன்படுத்தாவிட்டாலும், மறைமுகமாக அவரைத் தாக்கிப் பேசியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

விளையாட்டு

58 mins ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்