துல்கர் சல்மானின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By ஸ்கிரீனன்

துல்கர் சல்மானின் 25-வது படமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மானின் 25-வது படம் தமிழ் படமாக அமைந்திருக்கிறது. 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை புதுமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கி வருகிறார்.

காதலர் தினத்தை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. துல்கர் சல்மான் மற்றும் ரீத்து வர்மா இருவருமே 'இதய வடிவத்தில்' கைகளை வைத்திருப்பது போன்று போஸ்டரை வடிவமைத்திருக்கிறார்கள். இதற்கு இணையத்தில் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

புனே மற்றும் கோவா ஆகிய ஊர்களின் படப்பிடிப்பைத் தொடர்ந்து, சென்னையில் தற்போது சில முக்கிய காட்சிகளை படமாக்கி வருகிறது படக்குழு. ஜுன் மாதம் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இப்படம் குறித்து இயக்குநர் தேசிங் பெரியசாமி பேசுகையில் , '' இது ஒரு பயணம் சார்ந்த காதல் கதை. எல்லா தரப்பட்ட எமோஷன்களும் இக்கதையில் உள்ளன. இக்கதைக்கான தலைப்பை சில காலமாகவே தேடி வந்தோம். அப்பொழுதுதான் ரஹ்மான் சாரின் பெரிய ஹிட் பாடல் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' பாடல் மனதிற்கு வந்தது. காதலையும் ரொமான்ஸையும் ஒரே வரியில் வர்ணிக்க இந்த வரியை விட பொருத்தமானது வேறெதுவும் இல்லை" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 mins ago

க்ரைம்

16 mins ago

சுற்றுச்சூழல்

52 mins ago

க்ரைம்

56 mins ago

இந்தியா

54 mins ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்