மறக்க முடியாத நடிகை: ஸ்ரீதேவிக்கு சிவகுமார் இரங்கல்

By செய்திப்பிரிவு

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி என இந்தியத் திரையுலகில் கோலோச்சிய ஸ்ரீதேவி திடீரென காலமானது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஸ்ரீதேவியின் மரணம் குறித்து பிரதமர் மோடி முதல் கடைக்கோடி தமிழ் சினிமா ரசிகர் வரை தங்களது ஆழ்ந்த வருத்தங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி என இந்தியத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் ஸ்ரீதேவிக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் சிவகுமார் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து, "குழந்தை நட்சத்திரங்களாக இருந்து பெரிய ஹீரோ, ஹீரோயினாக தமிழில் நமக்கு தெரிந்த இரண்டு பேர் கமல்ஹாசன், ஸ்ரீதேவி.

16 வயதினிலே மயிலை தமிழ் ரசிகர்கள் யாரும் மறக்க முடியாது. அதன் பிறகு மூன்று முடிச்சு, வறுமையின் நிறம் சிகப்பு என்று பல ஹிட் படங்களில் நடித்தார்கள்.

ஆதிபராசக்தி படத்தில் ஜெயலலிதா அம்மையார் மடியில் முருகர் வேடம் இட்டுக்கொண்டு நடிகை ஸ்ரீ தேவி அமர்ந்திருந்தது எனக்கு இன்னும் நன்றாக நினைவிருக்கிறது.

நானும் ஸ்ரீதேவியும் கவிக்குயில், மச்சானை பார்த்திங்களா, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு என்று மூன்று படங்களில் ஒன்றாக நடித்தோம்.

ஹிந்தியில் உச்சம் தொட்ட நடிகை. சிவகாசி பக்கம் அவரின் பூர்விகம். இவ்வளவு சீக்கிரம் அவரின் வாழ்க்கை முடியும் என்று யாரும் கற்பனை கூட பண்ணி இருக்க மாட்டார்கள். அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

தமிழகம்

25 mins ago

வணிகம்

47 mins ago

தமிழகம்

58 mins ago

வாழ்வியல்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்