ரசிகரின் கேள்விக்கு தீரன் தயாரிப்பாளரின் பதில்: சமூக வலைதளத்தில் வரவேற்பு

By ஸ்கிரீனன்

ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு 'தீரன்' தயாரிப்பாளர் பதிலளித்தார். அந்த பதிலுக்கு சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், போஸ் வெங்கட், அபிமன்யு சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

காவல்துறை அதிகாரிகள் தரப்பிலும் இப்படத்துக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால், படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தயாரிப்பாளர் பிரபுவின் ட்விட்டர் தளத்தைக் குறிப்பிட்டு "சார், 'தீரன்' படத்தின் சப்டைட்டிலுடன் இருக்கும் நல்ல பதிப்பை காசு கொடுத்து இணையத்தில் பார்க்கும் வாய்ப்பு உள்ளதா? நான் இருக்கும் இடத்தில் படம் சப்டைட்டிலுடன் வெளியாகவில்லை. படத்தை பார்க்க மிக மிக ஆவலுடன் இருக்கிறேன். தயவு செய்து உதவிசெய்யுங்கள்" என்று சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, "முடிந்தால் 25 நாட்கள் காத்திருங்கள். அமேசான் ப்ரைம் வீடியோவாக வெளியாகும். இல்லையென்றால் நல்ல கள்ள பதிப்பு ஒன்றை தேடிப் பிடித்துப் பாருங்கள். பின் 'தீரன் அதிகாரம் ஒன்று' பெயரில் 10 டாலர்களை இல்லாதவர்களுக்கு தானமாகக் கொடுங்கள். நான் மகிழ்வேன், நீங்களும் நிம்மதியாக இருப்பீர்கள். என்னை நம்புங்கள்" என்று எஸ்.ஆர்.பிரபு பதிலளித்திருக்கிறார்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவின் பதிலுக்கு சமூக வலைதளத்தில் ஆதரவு பெருகி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

29 mins ago

வர்த்தக உலகம்

37 mins ago

இந்தியா

5 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

58 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்