இந்தி சினிமா எப்போதும் தமிழ் சினிமாவை உற்று கவனித்துக் கொண்டே தான் இருக்கிறது என்று 'அவள்' பத்திரிகையாளர் சந்திப்பில் அதுல் குல்கர்னி பேசினார்.
மிலிந்த் இயக்கத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அவள்'. இப்படத்தின் திரைக்கதையை இயக்குநர் மிலிந்த் உடன் இணைந்து எழுதி தயாரித்திருக்கிறார் சித்தார்த். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் அதுல் குல்கர்னி பேசியதாவது:
சென்னை எப்போதுமே எனக்கு ஸ்பெஷல். ஏனென்றால் இந்த சென்னை தான் என்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது. கமல் அவர்கள் தான் 'ஹேராம்' படத்தில் என்னை ஒரு நடிகனாக அறிமுகப்படுத்தினார். ’ரங்தே பசந்தி’ படத்துக்கு பின் 12 வருடங்கள் கழித்து சித்தார்த்துடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி.
எப்போதுமே நல்ல சினிமா நல்ல ஒரு குழுவால் தான் உருவாகிறது. இந்தி சினிமா எப்போதும் தமிழ் சினிமாவை உற்று கவனித்துக் கொண்டே தான் இருக்கிறது. தொழில்நுட்பம், இசை போன்றவற்றில் தமிழ் சினிமா எப்போதும் முன்னோக்கியே இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் 'அவள்' படம் வெளியாக இருக்கிறது. இந்திய சினிமாவில் இது ஒரு முக்கியமான ஹாரர் படமாக இருக்கும்
இவ்வாறு அதுல் குல்கர்னி பேசினார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
க்ரைம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
7 hours ago