பாலகிருஷ்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருடைய புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணா இன்று (ஜூன் 10) தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு சிரஞ்சீவி, வெங்கடேஷ் உள்ளிட்ட தெலுங்குத் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களும், தங்களுடைய வாழ்த்துகளை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர்.
இன்று பாலகிருஷ்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருடைய அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவரது 107-வது படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதனை கோபிசந்த் மாலினேனி இயக்கவுள்ளார். தமன் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார்.
சமீபத்தில் ரவிதேஜா, ஸ்ருதிஹாசன், வரலட்சுமி, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்த 'க்ராக்' படத்தை இயக்கியவர் கோபிசந்த் மாலினேனி. இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது போயபதி சீனு இயக்கத்தில் உருவாகி வரும் 'அகண்டா' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் பாலகிருஷ்ணா. இதன் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை முடித்துவிட்டு கோபிசந்த் மாலினேனி படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் பாலகிருஷ்ணா.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 mins ago
விளையாட்டு
8 mins ago
இந்தியா
12 mins ago
உலகம்
19 mins ago
சினிமா
1 hour ago
வலைஞர் பக்கம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago